திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடுகின்றன. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுவர்-சிறுமிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக அவர்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா? படம் இல்லை
படம் இல்லை