புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, வலையப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.