புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடைவீதியில் மெயின் ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக திறந்தவெளியில் சுற்றித்திரியும் மாடுகள், விவசாய நிலத்தில் மேயும் மாடுகளை பிடித்து அடைக்கும் பட்டி இருந்து வந்தது. தற்போது அது பயன்பாடு இன்றி பாழடைந்து காணப்படுகிறது. அதனை நூலக கட்டிடம் இன்றி சிறிய அறையில் செயல்பட்டு வரும் அரசு பொது நூலக கட்டிடத்தை இந்த இடத்தில் அரசு நூலக கட்டிடம் கட்டிட பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.