மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ரேஷன்கடை சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?