சேதமடைந்த நிழற்குடை

Update: 2022-09-09 10:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிழற்குடையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்குடையால் பொதுமக்கள் பலர் இதனை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்