சட்ட விரோதமாக மது விற்பனை

Update: 2022-07-11 18:34 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் காமராஜபுரம் அருகே உள்ள விக்னேஷ் பாரடைஸ் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மது பிரியர்கள் எந்நேரமும் மது அருந்திவிட்டு இப்பகுதியாக செல்லும் பெண்களை கேலி செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்