தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி கிராமம், திசையன்விளை- உடன்குடி சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள நெடுஞ்சாலைத்துறை பெயர் பலகையில் ஊரின் பெயர் அழிந்து வெறுமனே காட்சி பொருளாக இருப்பதாக பிரசாசபுரத்தை சேர்ந்த வாசகர் ஜேசு கோபின் என்பவர், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக தற்போது ஊர் பெயர் எழுதப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.