புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், வாசகர்கள் வந்து புத்தகங்கள் மற்றும் செய்தி தாள்களை படித்து செல்கின்றனர். இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாசகர்கள் நூலகத்திற்கு வருவதற்கு சற்று தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.