பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-09-07 12:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பஸ் நிலையம் உள்பட பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலை ஓரமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விளம்பர பதாகைகள் வைப்பதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் முற்றிலுமாக பதாகை வைப்பது தடை செய்யப்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் கவனச்சிதறல் இல்லாமல் வாகனங்கள் ஓட்டிச் சென்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக சாலை ஓரங்களில் தொடர்ந்து ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பதாகைகளை பார்த்துக் கொண்டே செல்வதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் காற்று, மழை காரணமாக சாலைகளில் சாய்ந்தாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கீரமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் சாலை ஓரங்களில் பதாகைகள் வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.



மேலும் செய்திகள்