திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கல்லுப்பட்டி கிராமம் பாறைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஒரு வகுப்பறை உள்பகுதியின் மேல் சுவற்றில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வகுப்பறைக்குள் விழுந்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் கசிவை சரிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.