கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் வேலாயுதம்பாளையம்-கரூர் நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடை மதியம் 12 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. இந்நிலையில் கடை திறப்பதற்கு முன்பே அதிகாலை முதல் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மது பாட்டில்களை வாங்குவதற்காக ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் வந்து தார் சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மதுபாட்டில்கள் வாங்கி அங்கேயே மது அருந்தி மதுபாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். சில நேரங்களில் போதை தலைக்கேறி அந்த வழியாக தனியாக செல்லும் இளம் பெண்களை பின்னாலே சென்று பயமுறுத்துகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.