வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2022-09-06 16:41 GMT
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கடைவீதியில் கடல் போல் மழை நீர் கரைபுரண்டு செல்கிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் வழி பாதையை கடந்து செல்ல 1 மணி நேரம் காத்திருந்தனர். இதற்கு முக்கிய காரணம் வடிகால் வசதி சரி செய்யாத காரணத்தாலும், ரெங்கசமத்திரம் ஏரி, சித்தேரி, தாண்டனேரி போன்ற ஏரிகளுக்கு போகும் வரத்துவாரிகள் தூர்வாரப்படாததாலும் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்