புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-09-06 12:44 GMT

பாளையங்கோட்டையில் புதிதாக சாலை அமைக்கும் பணியின்போது சமாதானபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரில் உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டதாகவும், இதனால் சாலையின் நடுவே மின்கம்பம் அமைந்திருப்பதாகவும் 'அப்துல் ஜப்பார் அனுப்பிய பதிவு தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக மின்கம்பம் அகற்றப்பட்டு விட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்