போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள்

Update: 2022-09-06 11:41 GMT

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதி நாகை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை தள்ளிவிடுவதால் வாகனங்கள் சேதமடைகின்றன. மேலும், குதிரைகள் இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்கள் குதிரைகள் மீது மோதி வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் குதிரைகளை கண்டு அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்