புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் தங்குவதற்கு என்று குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவர்கள் மற்றும் மருத்துவதுறை அலுவலர்கள் குடியிருந்து வந்தனர். தற்போது இந்த குடியிருப்புகளில் யாரும் குடி இல்லாமல் பாழடைந்து உள்ளது. இதனை புதுப்பித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.