புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மருத்துவமனை வளாகத்தை சுற்றி ஏராளமான சீமை கருவேலமரங்கள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சுகள் மருத்துவமனை வளாக்தை சுற்றிவருகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.