மழைநீர் வடிகால் வேண்டும்

Update: 2022-09-05 10:55 GMT

நாகை பகுதி செக்கடி முடுக்கு பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வடிகால் இல்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுகள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்