மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா மாவிலிபட்டி கிராமத்தில் நூலகம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுகிறது. புத்தகங்கள் நனைந்து வீணாகிறது. மேலும் இங்கு மின்சார வசதியும் இல்லை. இதனால் வாசகர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?