அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம் கா.கைகாட்டி-அரியலூர் சாலை மிக முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு சிமெண்டு மற்றும் தனியார் உள்ளிட்ட 9 ஆலைகள் இயங்கி வருகிறது. சிமெண்டு ஆலைகளுக்கு சிமெண்ட் தயாரிக்க சுண்ணாம்பு கற்களை வி.கைகாட்டி அருகே உள்ள புத்தூர், வெளிப்பிரிங்கியம், காட்டுப்பிரிங்கியம், சின்னநாகலூர், ரெட்டிபாளையம், மயிலாண்டகோட்டை பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் அதிக பாரத்துடன் படுதா போடாமல் சுண்ணாம்பு கற்களை வி.கைகாட்டி, அஸ்தினாபுரம் வழியாக அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு தினமும் 24 மணி நேரமும் எடுத்துச் செல்லப்படுகிறது. பெரும்பாலான டிப்பர் லாரிகளை வேகமாக டிரைவர்கள் இயக்குகின்றனர். சாலையில் உள்ள வேகத்தடையில் மதிப்பதே இல்லை. இதனால் வேகத்தடையில் லாரிகள் வேகமாக செல்லும்போது லாரிகளில் இருந்து சுண்ணாம்புக்கல் சிதறி சாலையில் கீழே விழுந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.