ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் மெயின்சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் தற்போது விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்றுவார்களா?