ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வாகனங்களின் குறுக்கே நாய்கள் பாய்வதால் விபத்தும் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன்கருதி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.