புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் ஊராட்சி, பொன்னங்கண்ணிப்பட்டி மற்றும் வாராப்பூர் கிரமத்தை சுற்றி சுமார் 1,000 மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தினமும் குளிப்பதற்கு இப்பகுதியில் உள்ள குளத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த குளத்தை பராமரிப்பு இன்றி தற்போது பயன்படுத்த முடியாத அளவிற்கு செடி-கொடிகள், ஆகாய தாமரைகள் முளைத்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.