ரேஷன் கார்டுதாரர்கள் அவதி

Update: 2022-09-04 13:45 GMT

நீலகிரி மாவட்டத்தில் 28-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. ரேஷன் கடையில் விற்பனையாளர், உதவியாளர்களாக பணிபுரியும் ஊழியர்கள் டெல்டா பகுதி சேர்ந்தவர்கள் என்பதால் மழை, குளிர்காலத்தில் உடல் நிலை பாதிப்பு காரணமாக விடுப்பில் செல்கின்றனர். ஒரு சில கடைகளில் ஒரே ஒரு விற்பளையாளர்கள் மட்டும் பணி செய்வதால் ரேஷன் அட்டைதாரர்கள் உணவு பொருள் வாங்க பல மணி நேரம் காத்து நிற்க வேண்டி உள்ளதால் அவதிப்படுகிறார்கள். எனவே ரேஷன் கடைகளில் கூடுதல் ஆட்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்