நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து நாகூர் செல்லும் சாலை மரைக்கான்சாவடி, பனங்குடி பகுதிகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கூட்டமாக நின்றுகொள்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக வாகனங்கள் மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?