கூடலூர் காளம்புழா பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடமாடவும் இடையூறாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. எனவே வேலியை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகர், கூடலூர்