புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலை ஓரங்களில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பள்ளி, கல்லூரி விளம்பரங்கள், கம்பெனி விளம்பரங்கள் என பலதரப்பட்ட விளம்பரங்கள் செய்ய மரங்களில் ஆணி அடித்து விளம்பர போர்டுகளை வைக்கின்றனர். இதனால் சாலையோர மரங்கள் ஒரு சில ஆண்டுகளில் பட்டுப்போய் விடுகிறது. மரம் இருந்தால் தான் மழை வளம் கிடைக்கும் என அரசு கூறுகிறது. ஒரு பக்கம் மரங்களை நடுகின்றோம். மறுபக்கம் சமூக விரோதிகளால் மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. அதோடு தனியார் பள்ளி, கல்லூரி, விளம்பர கம்பெனிகள் சாலையோர மரங்களில் ஆணி அடித்து தங்களது விளம்பர போர்டுகளை வைத்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.