நூலகம் திறக்கப்படுமா?

Update: 2022-09-02 17:01 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கீழபொட்டல்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே இவர்கள் அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று படிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்