நாகை மாவட்டம் வாய்மேடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக வாய்மேடு சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?