நாய்கள் தொல்லை

Update: 2022-09-02 13:58 GMT

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே புத்தூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி செல்வதால் அவர்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து செல்கின்றனர். மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்