சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி கிராமம், திசையன்விளை- உடன்குடி சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள நெடுஞ்சாலைத்துறை பெயர் பலகையில் ஊரின் பெயர் அழிந்து வெறுமனே காட்சி பொருளாக உள்ளது. இதனால் வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் குழப்பம் அடைகிறார்கள். எனவே பெயர் பலகையில் ஊர் பெயரை எழுதுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?