புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-09-01 13:13 GMT
பெரம்பலூர் நகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட புதிய மதனகோபாலபுரத்தில் தனியார் மண்டபம் அருகே உள்ள பகுதியில் மின்கம்பம் ஒன்று சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்பு கூடாக காணப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து பொதுமக்களின் சார்பில் கோரிக்கையாக அனுப்பபட்ட செய்தி கடந்த 26-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டியில் படத்துடன் பிரசுரமானது. இதனை கண்ட சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் அந்த எலும்பு கூடான மின் கம்பத்தை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக புதிய மின் கம்பத்தை நட்டனர். இதற்கு நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் ஏற்கனவே இருந்த மின் கம்பத்தில் தெரு விளக்கு இருந்தது. ஆனால் புதிய மின் கம்பத்தில் தெரு விளக்கு இல்லை. எனவே மின் கம்பத்தில் தெரு விளக்கு போடவும் மின்வாரியம் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

மேலும் செய்திகள்