ராமநாதபுரம் மாவட்டம் அச்சந்தன்வயல்- பட்டினம் காத்தான் கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.