ராமநாதபுரம் நாடார் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாய்கள், பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவ்வாறு சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் நாய்கள் துரத்துவதால் இப்பகுதியினர் காயமடைகின்றனர்.எனவே இந்த நாய், பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.