ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பெருமாநேந்தல் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் இல்லை. இதனால் மற்றோரு கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடமும் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் ஒருவித அச்ச உணர்வுடன் கல்விபயிலும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.