விருதுநகர் காமராஜர் பஸ் நிலையம் அருகே சாலையில் புளியமரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. அதை உடனே அகற்றா விட்டால் மழை காலத்தில் காற்றுக்கு சாய்ந்து சாலையில் செல்வோர்கள் மீது விழுந்து உயிர் சேதமும், போக்குவரத்துக்கு தடையும் ஏற்படும். இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.