ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் ஊராட்சி குதிரை மொழி கிராமத்தில் இருந்து ஐந்து ஏக்கர் பனை தொழிலாளர்கள் குடியிருப்பு செல்லும் சாலையின் இருபுறமும் கருவேர மரங்கள் அதிக அளவில் உள்ளது.இதனால் சாலையில் செல்ல முடியாத வகையில் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.