புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் நொச்சோடை குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்து வருகின்றனர். இதனால் குளத்திற்கு தண்ணீர் வரும் வழித்தடம் அடைக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகளின் நலன்கருதி நொச்சோடை பாசன குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.