திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதியில் மழை காலங்களில் மழைநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர், கழிநீருடன் கலந்து வீடுகளுக்கு புகுந்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.