கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் இருந்து மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம் ,திருக்காடுதுறை வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது .ஒவ்வொரு ஊர் பகுதிகளிலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகழூர் வாய்க்காலில் தண்ணீரில் வரும் தண்ணீர் தாமரைகள் ஆங்காங்கே பாலங்களில் தேங்கி நிற்பதால் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல முடியாமல் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.