பூட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம்

Update: 2022-08-30 14:36 GMT
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செம்பூதி ஊராட்சி, சிவந்திலிங்கபுரத்தில் உள்ள ஆதிதிராவிட மக்களின் நலன் கருதி இப்பகுதியில் ஆண்கள், பெண்களுக்கு என சமுதாய சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த இந்த சுகாதார வளாகம் சில நாட்களிலேயே மூடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். மேலும் இந்த சுகாதார வளாகத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி