சாத்தான்குளம் தாலுகா சாஸ்தாவிநல்லூர் கிராமம் பொத்தகாலன்விளை- மணிநகர் சாலையில் நரையன்குடியிருப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைந்துள்ளது. அதன் உள்ளே மேல்புறம் காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அங்கு பயணிகள் நிற்பதற்கு அச்சப்படுகிறார்கள். எனவே அதனை அகற்றிவிட்டு புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டிக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.