தடையின்றி நடக்கும் லாட்டரி விற்பனை

Update: 2022-08-30 12:31 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோடு, மார்க்கெட், சமயபுரம் செல்லும் சாலை, திருப்பைஞ்சீலி, திருவெள்ளறை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் குக்கிராமங்களிலும் தடை இன்றி லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது போலீசார் பெயரளவிற்கு வழக்குப்பதிவு செய்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து வியாபாரிகள் லாட்டரி விற்பனையை தடையின்றி நடத்தி வருகின்றனர். லாட்டரி மோகத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில், பல கூலித்தொழிலாளிகள் தினசரி தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி வாங்கி செலவழித்து வருகின்றனர். இதன் காரணமாக பல குடும்பங்கள் அவதியுற்று வருகிறது. இதன் காரணமாக சில பேர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். எனவே, போலீஸ் உயரதிகாரிகள் கண்டிப்புடனும், தீவிரமாக கண்காணித்தும் லாட்டரி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்