கூடலூர் குசுமகிரி பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி அருகே ஆபத்தான மரம் உள்ளது. தினமும் காலை மாலை நேரத்தில் மாணவர்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியில் எந்த நேரத்திலும் மரம் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே மரத்தை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் மரம் விழுந்தால் வீடுகளும் சேதம் அடையும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆபத்தான மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, கூடலூர்.
மணி, கூடலூர்.