நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த அகரக்கொந்தகையில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி உள்ள பெண்களின் நலன் கருதி மகளிர் சுகாதார வளாகம் ஒன்று கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் முறையான பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது. இதன்காரணமாக சுகாதார வளாக கட்டிடம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக திகழ்கிறது. மேலும், சுகாதார வளாக கட்டிடத்தில் உள்ள கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?