தெருநாய்கள் தொல்லை
தாராபுரம் நேதாஜி தெருவிலிருந்து பஜனை மடத்தெரு வரை 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் சின்னக் கடை வீதியிலிருந்து மீன் மற்றும் இறைச்சி கழிவுகள் சாக்கடை நீரில் வருவதை தின்று ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதுடன் சாலையில் நடந்து வருபவரை துரத்தி துரத்தி கடிக்க வருகிறது. இரவில் ஊளையிட்டும் சண்டையிட்டும் கொள்கிறது. இதனால் பொதுமக்களின் தூக்கம் பறிபோகின்றது. எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து ஊருக்கு வெளியே அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முத்துகிருஷ்ணன், தாராபுரம்.
99552 94929