தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-29 13:52 GMT

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனருகில் அங்கன்வாடி மையம், தூய்மை பணி அலுவலகம் ஆகியவை செயல்படுகின்றன. இங்கு தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை கூட்டம், கூட்டமாக சுற்றி வருவதோடு எதிரே வருபவர்களை துரத்தி கடிக்க முயல்கின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அச்சம் அடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்