ஊட்டி ஹவுசிங் யூனிட் பகுதியில் சில தெருவிளக்குகள் பழுதடைந்து உள்ளன. அவை ஒளிராமல் கிடப்பதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் அச்சத்தை போக்கவும் தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.