கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், ஹைஸ்கூல்மேடு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பொது கழிப்பிடம் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் இருந்த பொதுகழிப்பிடத்தை இடித்து அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.