ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம். செயல்படாமல் உள்ளது. இதனால் இங்கு வருவோர் மிகுந்த ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள், முதியோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஏ.டி.எம். எந்திரத்தை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்று கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.