தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் உள்ளன. ஆனால் அங்கு காவலாளி இல்லாததால், இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. எனவே பள்ளிக்கூடத்துக்கு காவலாளி நியமிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-ஜெயக்குமார், திருச்செந்தூர்.